" வணக்கம் சொல்றான் பொடியன்...திண்ணைக்கு வந்த நீங்க கால நீட்டி நிம்மதியா இருந்து..பாக்கு வெத்திலை சாப்பிட்டு கதை சொலிட்டு போகலாம்...படிச்சிட்டு போகலாம்..ஆனா நான் கொஞ்சம் ஒருமாதிரி ..இங்க போட்டிருக்க படங்களில Black border போட்டு Watermark பண்ணின படம் எல்லாமே Copyrights Reserved!!.. ...அதாகப்பட்டது..பொடியன கேக்காம Right Click பண்ணி Save as குடுத்து வேற எங்கயும் அந்த Photova அனுமதியில்லாம பாவிக்கிற ஆக்களுக்கு..எங்க ஊரில புகையிலை வித்த கதிர்காம முருகன்ட நிலைமை தான் ஏற்படும் என்டத முதலே சொல்லி வைக்கிறன்..மற்ற படி நான் ரொம்ப நல்லவனுங்க...:) "

Sunday, August 8, 2010

கண்ணகை அம்மன் சப்பர (சப்பற ??) திருவிழா..(2010)

புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் சப்பர திருவிழா காட்சிகள்..




அம்பாள் அடியார்..:P..என்ட அப்பா...:D

கடலில் மிதந்து வந்த கண்ணகை அம்மனும் சிலம்பும்...

மேளதாளங்கள்..
அம்மன் பவனி...
கடவுள் துதி ...



சப்பர திருவிழா வாத்திய கோஷ்டி...


என்ன மாதிரியே இருக்கான் ஒரு பொடியன்...:P
புங்குடுதீவில 5 வயசு தவ்வலும் Slr Camerala தான் படம் பிடிக்கும்..:P..my assistant photographer..


தேவார பதிகம் பாடும் அம்மன் அடியார்..
சப்பர திருவிழா முடிவில் தீவிர அம்மன் அடியார்களின் சில கோலங்கள்..:D
சேர்ந்து நிண்டு வெளுத்து கட்டு....

சப்பரம்...

இந்த முறையும் குடியானவர்கள் தங்கள் கைவரிசையை காட்ட தவறவில்லை...அதில நிண்ட பொடியன்கள் குடியானவர்களை கல்லால் அடித்து FUN எடுக்கவும் தயங்கவில்லை..

திருவிழாகாரர் ...
அவல்,வடை,பொங்கல்,மோதகம்,கடலை,வாழைப்பழம்,...

பாத்து முடிஞ்சா..???..அடுத்த முறையாவது ,இந்த முறையும் அம்மனை ஏமாத்தின மாதிரி ஏமாத்தாம திருவிழாக்கு கட்டாயமா வாங்க..நம்ம அம்மன் கோவில் திருவிழா வழமை மாதிரி சனம் இல்லாம நடகிறது சரியா எண்டு உங்க மனசாட்சிய தொட்டு சொல்லுங்க என்கிறான் பொடியன்....என்னங்க பெரிய இது..??..வருசத்துக்கு ஒரே ஒரு முறை ஒரு Flight தானே..எதோ பண்ணுங்க போங்க..

இதோட முடியலங்க ..இன்னமும் இருக்கு!..அடுத்த போஸ்ட்ல வேற ஒரு நாள் திருவிழா காட்சிகள் இருக்கு....stay tuned..



Friday, June 18, 2010

பொடியனும் ஊர் வீடும்....

பொடியன் ஒரு முடிவு பண்ணிட்டான்...இனி மேல் வாயாடியா இருக்க கூடாது....வீட்டுக்கு நல்ல புள்ளையா இருக்கனும்..முக்கியமா திண்ணை பக்கம் போய் குந்தி இருந்து போற வார ஆக்களோட வெட்டி நியாயம் கதைக்க கூடாது எண்டு..(ஐயோ நம்புங்க சத்தியமா உங்கள தான் Refer பண்றன்.!!!.)....பல நாள் பொடியன் காணாம போனதுக்கு இது காரணம் எண்டா அது தப்பு...!...அது சும்மா...கண்மணியை இமை போல காக்க போனனான்..இவளவும் தான் இப்ப சொல்லாம்..! Guess பண்றவங்க பண்ணிக்குங்க..
Hospitalலயே எந்த நேரமும் கிடகிறதால இன்னும் 6 மாசத்துக்கு பொடியன் எங்கயும் போக ஏலாது...so இருக்கிற photoச வச்சு தான் சமாளிக்கணும்...என்ன தான் இருந்தாலும்..அது சொந்த ஊரா தான் இருந்தாலும் ...அதுக்காக சொந்த வீட்ட மறக்க ஏலுமா ??...காலடில opportunity இருக்கிற நேரம் பொடியன் ஏன் ஊர் ஊரா சுத்தணும் ????....பழக்கமில்லாத ஊர் !!..கூடிட்டு போக ஒரு guideum சிக்காத நேரம் இப்பிடியாக பொடியன் மனச தேற்றி கொண்டு இருக்கிற நேரம் தான் உள்ள இருந்து அம்மா கத்தினவா....அடேய் இங்க வந்து பாரு என்னது எண்டு....என்ட அம்மா எனக்கு ஒரு spotter மாதிரி ...எதாவது வடிவா (என்னைய மாதிரி )..இல்லாட்டி பயங்கரமா.(உங்கள மாதிரி )..இப்ப ஏன் இந்த முறைப்பு...?????????....கதைக்கு வாறன்...என்ட அம்மா எனக்கு ஒரு spotter மாதிரி !!!...எதாவது கண்ட வந்து போட்டோ எடு என்பா...நிரம்ப தடவ எனக்கு பிடிச்ச நிரம்ப photos அப்பிடி எடுத்தது தான்....இந்த முறையும் அப்பிடி தான்....சிங்க வயசாச்சு..இன்னும் என்ட உடுப்ப நான் தோய்கிறதில்லை (மாட்டு வயசு எல்லாம் இப்ப old trend..புதுசா சிங்கம்,சுறா வயசு எண்டு வச்சு கொள்ளனுமண்ணே..)..அடியே Panni ..ராசாத்தி உனக்கு தாண்டி இத சொல்றன்...எதிர்காலத்தில பொடியன்ட மனசு கோணாம நடந்து கொள்ளுடி...:P...anyways இனி ஊர் பக்கம் போற ஆக்கள் எல்லாரும் உடுப்பு போட முதல் ஒருக்க நல்ல எல்லா இடமும் Check பண்ணுங்க சாரே...எங்க எங்க எல்லாம் கூடு கட்டி இருக்குதுகள் தெரியுமா....:(...சீ போங்க..!
கதைக்கு வாறன்..அப்பிடி அம்மா அரக்க பறக்க கூபிட்டு காட்டினது வேறொண்டும் இல்லை ஒரு சிலந்தி...உடம்பு முழுக்க விஷம் அண்ணே...!!!..ஊரில ரொம்ப அதிகமாம்..தென்னை மரதில இருந்து கடிக்குமாம்...சொல்வாங்க..நான் அத கேட்டு பயந்ததே இல்லை...ஏனெண்டா எனக்கு தான் மரமேற தெரியாதே..ஆமா ரொம்ப முக்கியம் இது இப்ப..!!!...கதைக்கு வாடா...வேறொண்டும் இல்லை...so அந்த சிலந்திய தோத்து போன IIFA functionku வந்த கத்ரினா கைப் ,பிரியங்கா சோப்ரா..மாதிரி மேலயும் கீழையும்..தலைகீழ..குப்பற எண்டு பல வித anglesla படம் எடுத்தன்...நான் சொன்னத இப்பிடி நீங்க தப்பு தப்பா நினைப்பீங்க எண்டு தெரிஞ்சு இருந்தா நான் சொல்லியே இருக்க மாட்டன் தெரியுமா..?...!!!..என்ன தான் நான் ஒரு இயற்கை உணர்வாளனா இருந்தாலும் என்ட வம்சத்தில கை வைக்க வந்த சிலந்திய சும்மா விடுவனா...??..வேற என்னங்க செய்யுறது..பாவம் தான்...என்ன தான் செய்யுறது வேற..சரி அத விடுங்க..அதுண்ட ஆத்மா சாந்தியாகட்டும்..!!
அபிடியே அத படம் எடுக்க தூக்கின camerava கீழ வைக்க மனசில்லை பாருங்கோ...வீட்ட சுத்தி சுத்தி படம் எடுத்தன் பிறகு...குச்சி ஐஸ்கிரீம் காரன் வரும் வரைக்கும்...அவனையும் சேர்த்து ஒரு படம் எடுத்த பிறகு தானன்னே கீழ வச்சனான்..சரி ஏன் வீண் பேச்சு உங்களுக்கும் ஆயிரம் வேலை இருக்கும்..எனக்கும் ராவணா பாக்க டைம் ஆகுது...படத்த பாத்திட்டு கிளம்புங்கண்ணே...வரட்டுமா..
சாண வண்டு..உருண்டையோட சேர்த்து தூக்கி தூக்கி நல்ல lightingla வச்சாலும்..கொய்யால வண்டு திருப்பி உருட்டி கொண்டு நிழலுக்குள்ள போகுது..என்னால முடிஞ்சது இவளவும் தான்...ஆள விடுங்க..
எங்க வீட்டு கிளுவமர படலை....
அடை மழைல நனைஞ்சு சளி பிடிச்சு வந்து Hallila நிண்ட எங்க வீட்டு கன்னு குட்டி..
குச்சி ஐஸ் கிரீம் கவர் இல்லாதது 1௦ /= போட்டது 2௦ /=...அப்ப. ..கவர் 1௦ /= .!!.கூட்டி கழிச்சு பாத்தா கணக்கு சரியாய் வருதுல்ல...;)..பாருங்க நீங்க இதையும் தப்பா தான் நினைக்குறீங்க..போங்க நீங்க சரியில்லை...!
எங்க ஊரு கிழவி...பனை கருப்பா வயசா இருக்கு...கிழவி வயசா கருப்பா இருக்குது..
கடி நாயும் சொறி நாய் குட்டிகளும்..
மரத்தயே 1௦ தடவ சுத்தி சுத்தி வந்தும் நல்ல anglela ஒரு snap கிடைகல...
அந்தி சாயும் போது ...
எங்க வீட்டு பனை மரங்கள்...
இது தாங்க அந்த சிலந்தி ...சாக முதல் இப்பிடி தாங்க அது கம்பீரமா நிண்டிச்சு...எத்தின தடவ கடிகிறதுகாக பாஞ்சிச்சு தெரியுமா...கோவக்கார பிள்ளை...சின்ன வயசில இப்பிடி பொத்தெண்டு போட்டானே...வீரம் மட்டும் போதாது அண்ணே ..விவேகமும் வேணும்..எங்க வலை பின்னுறது எண்டு ஒரு விவஸ்தை வேணாம்..??
கார்த்திகேசு வாத்தியார் வீடு. ..அட எங்க வீடு தான்...

Saturday, May 22, 2010

பொடியனும் சங்கு பொறுக்கிய கடற்கரையும்...

திருப்பி திண்ணை பக்கம் வந்த உங்கள பொடியன் வரவேற்கிறான்..எங்கட பொடியன நிரம்ப காலம் காணவே இல்லை என்டு யோசிக்கிற ஆக்களுக்கெல்லாம் ...நான் என்ன உங்கள மாதிரி வேலை வெட்டி இல்லாமலா இருக்கன்..:D...மன்னிசுகுங்க பொடியன் வாயாடி என்டு உங்களுக்கு தெரியாதா என்ன??..

ஓகே..போன முறை சொன்ன மாதிரி பாக்கு வெட்டி வெத்திலை கிண்ணம் எல்லாம் வாங்கி வச்சன் உங்கள எல்லாம் வரவேற்க..But கொழும்பில அடை மழை பாருங்கோ..வெத்திலை அழுகிட்டு,பாக்கு சீவல் நனைஞ்சிட்டு..So next time அதுகள மெல்லுவம்,நம்புங்கய்யா, அட எந்த நேரமும் தேனி மாதிரி எங்கயாவது போய் கொண்டே இருக்கிற panni கூட வீட்டையே முடங்கி போய் கிடக்குது என்டா பார்த்துகொள்ளுங்களேன் ...சரி வீண் பேச்சு நமக்கேன்..வேலைய பாப்பம் சார்,

புதுசா ஒண்டுமில்லைங்க, பழைய கஞ்சி தான்..பொடியன் திருவிழாக்கு போய் ஊரிலயே 10 நாள் வெட்டியா போட்டோ எடுத்து இப்ப upload பண்ண time இல்லாம மாசத்துக்கு 4 போட்டோ வீதம் கண்காட்சிக்கு போடுறான்,..இப்பிடியே போனா எப்பிடி தான் அந்த 1௦௦ photovayum upload பண்ண போறன் எண்டது கண்ணகை அம்மனுக்கு தான் வெளிச்சம்..நேற்று நிரம்ப சந்தோசமா இருந்தான் பாருங்கோ..So upload feeling வந்திட்டு.."உன் கடை கண் பார்வையில் என் உலகம் சுத்த தொடங்கியதடி" என்டு கவிதை வேற சொல்ல பொடியன் ஆசைபடுறான்..அண்ணே அது சொந்த வரி அண்ணே..Dont copy..எல்லாதுக்குமா Black Border போட ஏலும்???...ஆறுதலா silenta feelingகோட பாத்து ரசிக்க இங்க ஒண்டுமே இல்லை பாருங்கோ..எண்டாலும் பொடியன்ட main aim நிரம்ப நாள் கனவான கடற்கரையும் தனியா நிக்கிற படகையும் படம் பிடிகிறது தான்...

கண்ணகை அம்மன் கடற்கரை பக்கம் போய் இறங்கினா பிறகு ஏன் வந்தன் என்டு மறந்திட்டு...படம் எடுத்தது 1௦ நிமிஷம்..மிச்ச 3௦ நிமிஷம் panniku சங்கு பொறுகினதிலையே போய்டு..anyways..ரெண்டே ரெண்டு photoக்கு நான் ஏன் இவளவு கதைகிறன்..படத்த பாத்திட்டு bye சொல்லிடு கிளம்புங்கண்ணே..But திருப்பியும் வரணும்..ஆமா சொல்லிட்டன்..!!..TaTa

அந்தி பொழுது கரை திரும்பும் மீன்பிடிகாரர்..அடுத்த நாள் ஞாயிறு ,புனித சவேரியார் சர்ச் அண்ணே..யாரும் மீன் பிடிக்க போக மாட்டாங்க..Only day time work..No night duty..!!..பலதையும் பத்தையும் அறிஞ்சு வச்சிருகனுமண்ணே ..
மணியம் அண்ணைண்ட மகன Model ஆக்கி எடுத்த போட்டோ..நாமெல்லாம் இப்பிடி தாங்க பொய் scenea உண்மையான மாதிரி காட்டுவம்..கண்டுகாதீங்க..:P
மேற்கு சிவந்த நேரம்..
One of my Dream photo of all time...But still unfortunate that i didn't get the exact sunset i wanted..
அவளுக்கு...

சத்தியமா நான் எடுத்த போட்டோ தாங்க..நம்புங்கண்ணே..வரட்டுமா !!..
NB - No one comments before SHE comments !!!..:)

Tuesday, May 4, 2010

புங்குடுதீவு பொடியனும் குளக்கரையும்..-Photo கண்காட்சி

வாங்கோ வணக்கம்...என்ன இந்த பக்கம்?..பொடியன் சும்மா வேலை வட்டி இல்லாம Blog பண்றான் எண்டு தெரிஞ்சும் அதை பாக்க வந்த உங்களுக்கு நன்றி..வேறொண்டும் இல்லைங்க..சும்மா ரெண்டு மூண்டு படம் எடுத்தனான் குளக்கரைல..அதை தான் share பண்ணுவம் எண்டு link அனுப்பினான் எல்லாருக்கும்..

கேளுங்களேன் பொடியன் பருந்து பிடிக்க போன கதைய...கண்ணகை அம்மன் கோவில் திருவிழாக்கு போன பொடியன் திருவிழா முடிஞ்சு என்ன செய்றதேன்டே தெரியாம திண்ணைல இருந்து வானத்தையே வெறிச்சு பாத்து கொண்டு இருந்த நேரம் தானண்ணே அந்த பருந்து என்ட தலைக்கு மேல என்னய ஒரு மாதிரி பாத்து கொண்டே போய்ச்சு..அப்ப தாங்க வெட்டியா இருக்கிறத விட பருந்தயாவது படம் பிடிக்கலாம் எண்டு ஒண்டுக்கும் உதவாத ஒரு ஐடியா பொடியன் மனசில உண்டாகிச்சு.

தனியா போகவும் தெரியா ,பழக்கமில்லாத ஊருங்க..So யாரவது சிக்க மாட்டினமா எண்டு வெயிட் பண்ணி கொண்டிருந்த பொடியனுக்கு ரெண்டு சின்ன ஸ்கூல் போற இளசுகள் தன Set ஆகிச்சு..Thats okay,job comes before prestige, எண்டு திடபடுத்தி கொண்டு வெளிக்கிட்டமுங்க மூண்டு பேரும் ஒரு சைக்கிளில..எங்க அண்ணே போறது - ஒரு பெடி,..எங்கயாவது வெளிநாட்டு கொக்கு நிக்கிற இடத்துக்கு போவம் எண்டு சொல்ல அவங்க கொண்டு போய் விட்ட இடம் தாங்க அந்த குளக்கரை.

பாதமளவுக்கு தான் தண்ணி..என்ட அண்ணன் ஒருக்கா சொன்னவர் இங்க தான் நீந்தி பழகினான் எண்டு, அத யோசிச்சு பாத்தன்!..சரி விடுங்க ...அண்ணே கொக்கு பாக்க போன நேரம் 5.30 Pm.ஒரு பட்சி கூட இல்லைங்க..So சும்மா ஏன் வருவம் எண்டு ரெண்டு மூண்டு Sunset போட்டோ,அபிடியே நானும் ஒரு ஸ்டில்,எடுத்திட்டு சரி நடந்திடலாம் எண்டு ,நம்பினா நம்புங்க,குளத்துக்கு நடுவால பொடியன் நடந்தான் பாருங்க..சூப்பரா இருந்திச்சு..அத மட்டும் முதலே நான் கண்டிருந்தா சத்தியமா அப்பிடி கால் வச்சிருக மாட்டனுங்க தண்ணிக்குள்ள...எத கண்டா??..பொறுங்கோ ..அத கண்டது ரெண்டு நாளுக்கு பிறகு...Now lets look at the first day photos..Please Click on the photos to see the larger views..


தட்டான் தட்டு தடுமாறி Land ஆகுற நேரம் எடுத்த படம்..அண்ணே போட்டோ Sharp இல்லை எண்டு நினைக்காதீங்கோ..வேணுமெண்டே blurred ஆக்கி எடுத்தனான்.

தண்ணிக்குள் இலை...
சூரியன் Almost மறையுறான் நான் போன நேரம்..
நாம போன Safari வாகனம்
ஒரு பெடி முன்னுக்கு நடக்க காத்திருந்து எடுத்த படம்..
இது தாங்க பிள்ளையார் கொவிலடில நாமெல்லாம் கை விட்டிட்டு போன வயல் வெளி, Sunset நேரம்..
My Assistants.ஒருத்தன் கைய காட்டி படம் எடுத்தது போதும் வாடா கரைக்கு தக்காளி !!!! எண்டு பேசுற மாதிரியே ஒரு Feeling .. :S
நான் தான்.அண்ணே இது தம்பட்டம் இல்லை ..இந்த மூஞ்சிக்கு அது ஒண்டு தான் குறைச்சல் !..But ஒருத்திக்காக[ ;) ] Speciala upload பன்னினன்,,அடியே Panni பாருடி கையில கொக்கின்ட இறகு..இப்பயாவது நம்புறியாடி???..
இந்த தண்ணிக்குள்ள தான் அது இருக்குதண்ணே!!!

இனி ரெண்டாவது நாள்
அண்டைக்கு இரவு பயங்கர மழை பாருங்கோ...பொடியனுக்கு சந்தோசம்..நாளைக்கு குளம் நிரம்பியிருக்கும்..பருந்து Shooting sure !!!..விடிய காலம அதாவது 10.30 AM for me..வீட்ட வேலி அடைக்க வந்த "விச்சுழி" என்கிற மரியதாஸ் அண்ணய Friend பிடிச்சு பொடியன் அவரோட சைக்கிளில வெளிகிட்டான்..But this time my plan was ஒருக்கா அங்கால வேற சில இடங்கல சுத்தி கொண்டு குளத்துக்கு போவம் எண்டது தான்..

so கண்ணகை அம்மன் கொவிலடியால அப்பிடியே Beach பக்கமா Navy Camp அடிச்ச இடம் மட்டும் போன பொடியன் நாச்சியம்மை கொவிலடில ஒரு Stop போட்டான்..காரணம் அந்த தென்னை மரம்..அண்ணே நம்புங்கோ ...நம்ம ஊரில ஒரு Maldive scene கண்டன் ...அத உடனயே Click பன்னினன் ...பிறகு கோவிலுக்குள்ள ஒரு சுத்து,நாச்சியம்மையவது அவளுக்கு நல்ல புத்திய குடுக்கணும் எண்டு..8-),..கும்பிடு போட்டிட்டு குளகரைக்கு வந்து சேர்ந்தம் வல்லன் பக்கமா..
என்னை நிப்பாட்டிய தென்னை மரம்...
நாச்சியம்மை கோவில் மணி...சுமாரா ஒரு 10 நிமிஷம் நிண்டு பல கோணங்களில படம் எடுத்தும் சுமாரா தான் வந்திருக்கு படம்.:(..Thats okay..
நாச்சியம்மை கோவில் மணி கோபுரம் - தமிழ் சரியோ தெரியல...கடைசியா எனக்கு தெரிஞ்ச ஒரு மொழியும் தெரியாம போகுதே..:(..

குளகரைல சைக்கிள் விட்ட பற்றைகுள்ள இருந்து என்னைய வரவேற்றது வேற எதுவும் இல்லை பாருங்கோ..."பாம்பு செட்டைங்க"....நாக பாம்பு தோலுரிச்சு கழட்டி போட இடத்தில தான் என்ட Second day ஆரம்பமாகிச்சு பாருங்கோ...பொடியன் துணிஞ்சவன்..அபிடியே பாம்பு செட்டைய சுருட்டி ரெண்டு பெரிய இலைல பார்சல் கட்டி பாக்கெட்ல போட்டவன்..வீட்ட போனா அம்மாட ஊழி தாண்டவத்த பாக்க நேரிடுமே என்ட ஒரே காரணத்துக்காக தாங்க அத திருப்பி கீழ எறிஞ்சிட்டு வந்தனான்..அநியாயம்..Campus பொடியனுகளுக்கு Scene காட்ட வேண்டிய chance அம்மா பற்றிய Terroறால spoil ஆகிட்டு..Thats okay..But திரும்பி பாத்தனுங்க குளத்த...சும்மா சொல்ல கூடாது அண்ணே..சொர்கமுங்க..!!!!
பாருங்களேன் நீங்களே...
கழட்டி போட்ட நாக பாம்பு தோல்...
குளக்கரை மேச்சல் மாடுகள்..

வெளிநாட்டு கொக்கை விரட்டும் ஊர் கொக்குகள்...திண்ணையில கதை Create பண்றதெல்லாம் சகஜமப்பு ...
மீன் பிடி பறவை ஒண்டு எத்தி எத்தி தனியில் நடந்த போது
ரெண்டு பறவையும் வேற வேற அண்ணே....சொண்ட பாருங்கோ...கண்டதையும் படம் பிடிகிறவன் இல்லை இந்த பொடியன்...புதுமை முக்கியமுங்க..சரி விடுங்க இப்ப என்ன பெரிசா பீற்றி கொண்டா??
Photoகாக கல்லடிச்சு குழப்பின பறவை கூட்டம்
எனக்கு பிடிச்சிருக்கு இந்த Glider
இத படம் பிடிக்க 15 நிமிஷம் நின்டனுங்க..Im not satisfied though..
இதுக்கு தாங்க இவ்வளவு பாடு...பருந்து மீன் பிடிகிறத எடுத்திடனும் எண்டு கால் கடுக்க ஒரே இடதில one hour நின்டவனுக்கு அடிச்சது யோகம்...Thank God..one of my dream photos....

மொத்ததில ரெண்டாவது நாள் நல்ல வேட்டை பாருங்கோ..ரொம்ப திருப்தியா வீட்ட போனான் பொடியன்...
இனி மூண்டாவது நாள்...இதான் Last Day ..So திண்ணைலயே இருங்க please...

மூண்டாவது நாள் திரும்ப Bettera Photo எடுப்பம் எண்டு கனவோட இருந்த பொடியன்ட கனவு கரைஞ்சு போனது இரவிருந்து காலம 10 மணி வரை பெய்த மழையால..சரி மழை விட்டிட்டு சும்மா போய் பாப்பம் எண்டு ,வீட்ட வேலை பாக்க வார பொடியன்ட மோட்டார் பைக்ல வெளிக்கிடன் பாருங்கோ...நினைச்ச மாதிரியே குளக்கரை வெறும் கரையா இருந்திச்சு...பெரிசா பறவையும் இல்லை...அங்க ஒண்டு இங்க ஒண்டு தான்..ஒரே ஒரு பருந்து மட்டும் வட்டமிட்டு கொண்டு scene காட்டிட்டு பறந்து போச்சு..2 hours wait பண்ணின எனக்கு ஏமாத்தம் தான்..But suddenly வந்தது ஒரு Thought..இவளவு பருந்து இந்த இடதில இருக்கே....இதுகள் எங்க இருந்து வரும் எண்டு...வழிபோக்கன் மாதிரி சுத்தி திரியிற என்னை அந்த ஐடியா feed பணியது...What else !!..பறந்து போனா பருந்தின்ட திசைலயே follow பண்ணினான் பொடியன்....

அப்ப தாங்க அந்த கொடூரத்த கண்ணால கண்டன்..பருந்து திண்டிட்டு போட்டு போனா ஒரு உயிரினம்....சேர்ந்து வந்தவர் தான் சொன்னார்..அண்ணே அது நீர் பாம்பு..இந்த குளத்தில இருக்குதுங்க எண்டு ...எனக்கு ஒரு Tank வெடிச்சு ஊதுற மாதிரியே ஒரு Feeling...சுமாரா ஒரு மீட்டர் இருக்குமுங்க....ஐயோ இந்த குளதிலையா இறங்கி நடந்தன்முதல் நாள்..எல்லாமே அவளுக்கு Design போட்ட இறகு ஒண்டு பொறுக்க போனதிண்ட effect..அம்மன் தான் காப்பாதினா..!!..
பிறகு இத பற்றி விசாரிச்சதில இதுக்கு விஷம் இல்லையாம்..So இனி பயமில்லாம இறங்கி நடக்கலாம்..:P

தொடர்ந்து நடந்து கடசில பருந்து இருந்த இடத்துக்கு போனன்..ஒரு பாழடைஞ்ச வீடு பாருங்கோ..சுத்தி வர பெரிய பனை மர தோப்பு...அங்க இருக்கினம் எல்லாரும்..ஒரு 7 பருந்துகள் ,1 கழுகு..சந்தோசம்..அவையும் குழம்பி பறக்க வெளிகிட்டினம்...
இடமே காலி ஆனா பிறகு வெளியால வந்து திருப்ப குளகரைக்கு வந்த பொடியன் கண்ட காட்சி ..ரெண்டு தட்டான் அண்ணே...அத ஏன் நான் சொலணும்..நீங்களே பாத்து கொள்ளுங்க..
மழை தானே அவைக்கும் குஷி தான் போங்க ..But பொடியன் இந்த படம் எடுத்தது தட்டானுகளின்ட அந்தரந்தங்கள வெளிச்சம் போட்டு காட்டுறதுக்கு இல்லை....அதுக்கு அவை காவியுடையும் போட்டிருக்க இல்லை..:P..இருந்தாலும் look at the Heart Shape...Love !!!!
சாணிச் சாமி..
அவளவும் தானுங்கோ என்ட குளக்கரை படப்பிடிப்பு....ஒரு வத்தின குளத சுத்தி இவ்வளவு காட்சியல சத்தியமா எங்க ஊரில மட்டும் தான் அண்ணே பாத்திருக்கன்...மீண்டும் meet பன்வம்..next time திண்ணைல பாக்கு வெட்டியும் வெத்திலை கிண்ணமும் வாங்கி வைக்கிறன்...BookMark பண்ணிட்டு போங்கோ திண்னைய..Next time my favorite beach Photoசோட சந்திக்கிறன்.... வணக்கம் .TaTa