புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் சப்பரம்,வேட்டைத் திருவிழா காட்சிகள்.
stay tuned with my official photography site www.theasianpictures.com for high resolution pictures...
இது ஒரு புங்குடுதீவுப் பொடியனின் திண்ணை பாருங்கோ...
அரசுகள் கை விட்ட போதும் ,
வளைந்தும் நெளிந்தும் கீழும் மேலுமாய் திக்கு திசை தெரியாத ஒற்றையடி பாதையாய் ,இயற்கையாய் எம் வாழ்க்கை ..
இதயம் துடித்தது ,மலையோர இளங் காற்றில் அம் மலர் ஆடிய சந்தத்துக்கு ஏற்ப..
பச்சையாய் அழகாய் ஒரு மாலை நேரத்து தேயிலை தோட்டத்து பாதை,
இன்னொரு காலை பொழுது...சோம்பல் முறிக்கும் முகத்தை வரவேற்கும் ..இரவு முழுதும் பனியில் குளித்த செடிகள் ..
ஏறிய மேடும் , இறங்க வேண்டிய பள்ளமும்!! ...மேடும் பள்ளமும் கிட்ட தட்ட ஒன்று தான்...பாக்கிறவன் பாக்கிற விதத்தில பாக்கணும்..இங்க பாருடா வேலை வட்டி இல்லாம வீட்டில வெட்டியா இருக்கிற பேய்குட்டி பொடியன் கருத்து சொலுறான்.போடா டேய் போ..
நீல வானம்,தேயிலை தோட்டம்,கற்சுவர்,வளைந்து,முடிந்த பாதை...
காலை நேரம்,குளிர் காற்று --- , வெற்றிலை வாய்,திருநீற்று பட்டை,சிவந்த குங்கும பொட்டு,சுருங்கிய முகத்து தோல்,மூக்குத்தி ,வளையல் ,அடகு வைத்த தோடு, வெறும் கால்,கிழிந்து தைத்த சீலை,வெறும் வயிற்றை இறுக்கி கட்டிய கயிறு,பின்னால் கூடை,புன்னகைத்த முகம்...அவளுக்காக காத்திருக்கும் தேயிலை செடிகள்...
சரி படம் பாத்து time waste ஆகினது போதும் !!..போங்க போய் வேலைய பாருங்க..

அம்பாள் அடியார்..:P..என்ட அப்பா...:D
கடலில் மிதந்து வந்த கண்ணகை அம்மனும் சிலம்பும்...
மேளதாளங்கள்..
அம்மன் பவனி...
கடவுள் துதி ...


சப்பர திருவிழா வாத்திய கோஷ்டி...

என்ன மாதிரியே இருக்கான் ஒரு பொடியன்...:P
புங்குடுதீவில 5 வயசு தவ்வலும் Slr Camerala தான் படம் பிடிக்கும்..:P..my assistant photographer..

தேவார பதிகம் பாடும் அம்மன் அடியார்..
சப்பர திருவிழா முடிவில் தீவிர அம்மன் அடியார்களின் சில கோலங்கள்..:D
சேர்ந்து நிண்டு வெளுத்து கட்டு....
சப்பரம்...
இந்த முறையும் குடியானவர்கள் தங்கள் கைவரிசையை காட்ட தவறவில்லை...அதில நிண்ட பொடியன்கள் குடியானவர்களை கல்லால் அடித்து FUN எடுக்கவும் தயங்கவில்லை..
திருவிழாகாரர் ...
அவல்,வடை,பொங்கல்,மோதகம்,கடலை,வாழைப்பழம்,...
சாண வண்டு..உருண்டையோட சேர்த்து தூக்கி தூக்கி நல்ல lightingla வச்சாலும்..கொய்யால வண்டு திருப்பி உருட்டி கொண்டு நிழலுக்குள்ள போகுது..என்னால முடிஞ்சது இவளவும் தான்...ஆள விடுங்க..
எங்க வீட்டு கிளுவமர படலை....
அடை மழைல நனைஞ்சு சளி பிடிச்சு வந்து Hallila நிண்ட எங்க வீட்டு கன்னு குட்டி..
குச்சி ஐஸ் கிரீம் கவர் இல்லாதது 1௦ /= போட்டது 2௦ /=...அப்ப. ..கவர் 1௦ /= .!!.கூட்டி கழிச்சு பாத்தா கணக்கு சரியாய் வருதுல்ல...;)..பாருங்க நீங்க இதையும் தப்பா தான் நினைக்குறீங்க..போங்க நீங்க சரியில்லை...!
எங்க ஊரு கிழவி...பனை கருப்பா வயசா இருக்கு...கிழவி வயசா கருப்பா இருக்குது..
கடி நாயும் சொறி நாய் குட்டிகளும்..
மரத்தயே 1௦ தடவ சுத்தி சுத்தி வந்தும் நல்ல anglela ஒரு snap கிடைகல...
அந்தி சாயும் போது ...
எங்க வீட்டு பனை மரங்கள்...
இது தாங்க அந்த சிலந்தி ...சாக முதல் இப்பிடி தாங்க அது கம்பீரமா நிண்டிச்சு...எத்தின தடவ கடிகிறதுகாக பாஞ்சிச்சு தெரியுமா...கோவக்கார பிள்ளை...சின்ன வயசில இப்பிடி பொத்தெண்டு போட்டானே...வீரம் மட்டும் போதாது அண்ணே ..விவேகமும் வேணும்..எங்க வலை பின்னுறது எண்டு ஒரு விவஸ்தை வேணாம்..??
கார்த்திகேசு வாத்தியார் வீடு. ..அட எங்க வீடு தான்...